போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென,ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்த வருடம் ரஸ்யாவுக்குச் சென்ற இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 27 இலங்கையர்களுள் 17 பேர் தமது சிறைத்தண்டனைக் காலம் நிறைவு பெற்று, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஏனைய 10 பேர் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.