இராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும்.

அமைச்சர் சரத் வீரசேகர இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரலாக பொறுப்பு வகித்தவராவார்.

அத்துடன், அவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு உள்விவகார, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ள