கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் மேலும் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயிரிழந்த இருவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 02 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 ஐச் சேர்ந்த 96 வயதுடைய பெண்  ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.