தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும்கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (30) காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.