கொவிட் 19 தொற்றாளர்ளாக நேற்று(28) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றிலிருந்து 16,656 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 6,223 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.