மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி காட்டுப்பகுதியில் சம்பவ தினமான நேற்று பொலிசார் குறித்த பகுதியிலுள்ள நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.