இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின் தடை உள்ளிட்ட காரணங்களால் வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இந்த காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த கலந்துரையாடலில் அவதான செலுத்தப்பட்டதாக  மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (30) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.