கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் பொதுமகன் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு இன்று இராணுவத்தினர் பொலீசார்,புலனாய்வாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62)என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தேடுதலில் பல வெடிப்பொருட்களும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.