ஐந்து மாதங்களின் பின்னர் முதல் முறையாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அவுஸ்திரேலியா வின் மெல்போர்னில் தரையிறங்கியுள்ளது.கொரோனா நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் விமானம் இதுவாகும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் 604 நேற்றுக் காலை மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஜூலை 10ம் திகதிக்கு பின்னர், மெல்போர்னுக்கு வந்த முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.