முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா, தொற்று உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து அவர், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அந்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். என சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.

பிரபல கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி, காணாமலாக்கச் செய்து, படுகொலைச் செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.