பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

ரயில் நிலைய பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதால், பயணிகளின் நலன் கருதி ரயில் நிலையத்தை மூட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ரயில் நிலைய அதிபர்கள் இருவர் உள்ளிட்ட ரயில் நிலைய அலுவலக சபையினர் 6 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாளை(16) குறித்த ரயில் நிலையம் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளதென தெரிவித்த அவர், கூடிய விரைவில் ரயில் நிலையத்தை தற்காலிக அலுவலக சபையினரைப் பயன்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேருவளை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள ரயில் பயணிகளுக்காக, ஹெட்டிமுல்ல,மக்கொன ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.