கொரோனா வைரஸ்  தொற்றால்  கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

63 வயதான ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தொற்றாளர்,  கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.