கொழும்பு நகரில் அதிசொகுசு பஸ் சேவையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

Park and Ride எனும் புதிய பெயரில் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

அதற்கமைய, முதலாவது கட்டத்தில் 25 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மொரட்டுவை மற்றும் மாகும்புற தொடக்கம் கொழும்பு நகர் வரை இந்த அதிசொகுசு பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பஸ் சேவையை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான பிரத்தியேக தரிப்பிடங்களும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.