இன்று (20) வரையிலும் முடக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை கோகிலா, வெல்லம்பிட்டி சாலமுல்ல ஆகிய பிர​தேசங்கள், நாளை (21) காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும்.

இது தொடர்பிலான அறிவித்தலை, அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்டது.

இதேவேளை, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, மயூரா பிளேஸ், நஷீர் வத்த ஆகியன தொடர்ந்தும் முடக்கப்பட்டு இருக்கும் என அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 262 பேர் இன்று (20) இனங்காணப்பட்டனர்

கொழும்பில் மேலும் முடக்கப்படும் பிரதேசங்கள்

பொலிஸ் பிரிவுகள்

முகத்துவாரம்,
கொட்டாஞ்சேனை
கிராண்ட்பாஸ்
ஆட்டுப்பட்டித்தெரு
டேம் வீதி
வாழைத்​தோட்டம்
மாளிகாவத்தை
தெமட்டகொட
மருதானை

கிராம சேவகர் பிரிவு

கொம்பனி வீதியில் பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு
பொரளையில் வனாத்தமுல்ல கிராம ​சேவகர் பிரிவு
மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்றகுப் பிரிவு
கொம்பனி வீதியில் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு
கறுவாத்தோட்டத்தில் 60ஆம் வத்தை
வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ்
வௌ்ளவத்தையில் நஷீர் வத்தை
மிரிஹான பொலிஸ் பிரிவில் தமிழ் வத்த ஆகியன தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.