நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 260 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 225 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
ஏனைய 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 37 891ஆக உயர்ந்துள்ளது.