இலங்கையில் மேலும் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.