க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது. அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

12 பாடங்கள் தொடர்பான செய்முறைப் பரீட்சைகள் நாளை இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.