நாட்டின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள், இன்று  (06) அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைப்பற்று நகர எல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒலுவில் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டாளச்சேனை 08 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 09 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.