யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று  (8) இரவோடிரவாக பல்கலைக் கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டுள்ளது

இதனையறிந்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் – அரசியல்வாதிகள் இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இரவிரவாக போராட்டம் தொடர்ந்த நிலையில், தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.

தற்போது பல்கலைக்கழக வாயிலில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், “துணைவேந்தரே பதில் கூறு, நினைவுத் தூபியை ஏன் இடித்தாய், பதவிக்காய் காட்டிக்கொடுக்காதே, துணைவேந்தரே பதவி விலகு, மாணவர்களை விடுதலை செய்” – என கோஷம் எழுப்பி வருகின்றனர்.