யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழ் மக்களின் நினைவிடங்கள்  கௌரவப் படுத்தப்படவேண்டும் என்பதை  வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழு கதவடைப்புக்கு (ஹர்த்தால்) கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பினை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.