மாகாண சபை தேர்தல்களை நடத்துவது மற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் வரவிருக்கும் திருத்தங்கள் குறித்து, அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக  ‘பெப்ரல்’எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சி வரவு – செலவுத் திட்டங்களின் தோல்வி காரணமாக சில நடைமுறை சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.