புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வாழ்விடமாகவும் கொண்டவரும், தேனீ இணையதள ஆசிரியருமான ஜெமினி என்றழைக்கப்படும் திரு. கணேஷ் கங்காதரன் அவர்கள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம்.

தமிழ் தேசிய உணர்வாளரான இவர் தமிழ்மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் தீவிரமாக அதற்கான பணிகளை ஆற்றி வந்தார்.

முன்பு ஈரோஸ் அமைப்பில் இருந்த இவர், பிற்காலங்களில் அவ்வமைப்பை விட்டிருந்தாலும் தொடர்ந்தும் ஒரு தமிழ் தேசியவாதியாக செயற்பட்டு வந்தார்.

அத்துடன் அவர் ஜெர்மனியில் இருக்கின்ற கழகத் தோழர்களுடன் மாத்திரமன்றி இங்கிருக்கின்ற தோழர்களுடனும் இங்கிருந்து எமது தலைவர் சித்தார்த்தன், உபதலைவர் மாணிக்கதாசன் போன்றவர்கள் அங்கு செல்கின்ற பொழுதுகளில் அவர்களுடனும் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார்.

அன்னாரின் இழப்பு ஒரு பேரிழப்பாகும். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)