இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பேலியகொடை, சிறைச்சாலை மற்றம் பேலியகொடை கொவித் கொத்தணி 59,688 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 63,644 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 882 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 57,159 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 313 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 7,054 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.