இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,505 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 968 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 59,043 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 323 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.