கொழும்பு பொரளை ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என, வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த 18 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமத நிலையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.