நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பின் தடைகளையும் தாண்டி முன்னேறி தாழங்குடாவில் தரித்து நின்றதுடன் இன்று காலை 8.30மணிக்கு மீண்டும் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்து திருகோணமலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

பிந்திய செய்திகள்படி மாலை 5.45 அளவில் திருகோணமலை குமரபுரத்தை அடைந்துள்ளது. இன்றைய பேரணி திருகோணமலை நகரில் நிறைவடைந்தது நாளை காலை மீண்டும் தொடரவுள்ளது.