தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டும், நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று, கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலிஸாரின் தடைகளை மீறியும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சுதந்திர தினத்தை கரிநாளைப் பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தபட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.