நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி இன்று காலை வவுனியா நகரில் இருந்து மன்னார் நோக்கி புறப்பட்டது.

பேரணி மடுரோட் சந்தியை அடைந்தபோது பேரணியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட மத்திய குழு உறுப்பினர்  சிவசம்பு மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆனந்தம், புவனம் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் பலரும் இணைந்து கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து பேரணி மடு தேவாலயத்தில் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு மன்னார் நகரை அடைந்து வெள்ளாஙுகுளம் ஊடாக மல்லாவியை நோக்கி நகர்ந்துள்ளது.