இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71,345 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 591 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறிய நிலையில் மொத்தமாக 65,644 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 365 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.