கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பாராளுமன்றத்தில் நேற்று  கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.