நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா ஒழிப்பு நிதியத்தில் இருந்து அதற்கான நிதியை பெற்றுக்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்  கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.