கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கொவிட் தொற்று ஏற்படாது என்று கூறிவிட முடியாதென தெரிவித்துள்ள பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, தடுப்பூசி ஏற்றி 3 வாரங்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலி, கேகாலை ஆகிய பகுதிகளில் இவர்கள் பதிவாகியுள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, பதில் சுகாதார அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.