புத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்களுக்கு விரைவாக கொவிட்-19 தடுப்புமருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளதாக, அறிக்கையொன்றில் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதத் தலைவர்களுக்கு தடுப்புமருந்தேற்றலானது, கண்டி மாவட்டத்தில் புத்த பிக்குகளுக்கு தடுப்புமருந்தேற்றலுடன் இன்று ஆரம்பித்துள்ளது. அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த 29 பிக்குகள், கண்டி தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தனர்.