இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் அலைனா B.டெப்லிட்ஸ் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்திருந்தார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா B.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் மேம்படுத்தப்பட்ட smart classroom எனப்படும் மெய்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.

சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21,000 அமெரிக்க டொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம், திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றிலும் மெய்நிகர் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட கல்வியியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே வவுனியாவிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.