இலங்கையில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,180 ஆக அதிகரித்துள்ளது.