யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஊடாக கொரோனா கொத்தணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. அங்கு கைதிகள் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 150 கைதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுக்கூட அறிக்கையின் பிரகாரம், 52 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.