யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில், இன்று  (01) காலை, மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் – இராசபாதை வீதியைச் சேர்ந்த   சீனிவாசன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இன்று காலை 6  மணியளவில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 தாக்குதலை மேற்கொண்ட மகன் (வயது 33) தலைமறைவாகியிருந்த நிலையில்,  கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.