இதுவரை மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளாதுள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு, இலசமாக மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலவசமாக மின்சார இணைப்பை வழங்கும் முதற்கட்ட செயற்பாடு, எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.