வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று (15) 8ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கஜனி என்பவர்,  திடீரென உடல்நிலை மோசமடைந்து,   யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது