பளை வேம்பொடுகேணியைச் சேர்ந்த என்.விஜயரட்ணம் என்பவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக குழாய்க் கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியிலிருந்து 35,000 ரூபாய் கொடுக்கப்பட்டு குழாய்க் கிணறு அமைக்கப்பட்டது

இவ்வுதவி நேற்று (25.03.2021)மாலை 4.00 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயற்பாட்டாளர் திரு. மாணிக்கம் ஜெயா (சின்னவன்) ஊடாக வழங்கப்பட்டது.