கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில்,  இன்று (28) காலை 7.30 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த நபர், தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தால் கழுவி கொண்டிருந்த போதே, சுத்திகரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முறையற்ற வகையில் சுத்திகரிப்பு  இயந்திரத்திற்கு மின் இணைப்பு வழங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.