கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை 11.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த தடுப்பூசி தொகை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை இலங்கையில் உள்ள 4,500 சீனர்களுக்கே முதலில் ஏற்றப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.