கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Scince, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில் துணை வேந்தர் இதனை தெரிவித்தார்.

இந்த மகாநாட்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ரணதுங்கவும் கலந்து கொண்டார்.

தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளது. இதனை இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனை அடுத்த ஜூன் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.ou.ac.lk/bsehons மற்றும் www.vgc.ac.lk. என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.