கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத் தோழர் பீடிஎக்ஸ் ரமேஷின் (சு.ரவிச்சந்திரன்) துணைவியாருமான திருமதி ரவிச்சந்திரன் சாந்தகுமாரி கடும் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).