நாட்டில் மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் நேற்று பதிவாகிய நிலையில், இதுவரை பதிவான  கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண், எல்லக்கல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண், கபுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண், தெனியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.