சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் நபைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக் கட்டடத்தை திறந்துவைத்தார்.

குறித்த அறநெறி பாடசாலை ஆதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய அவரது ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரியின்  அதிபர் மு.செல்வஸ்தான், திவாகரக்குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,  கட்சியின்  பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.