வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  பொது மக்கள் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவானது கைதுகளை மேற்கொண்டதாக வீரசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களென வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.