நாளை (19) தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்டுள்ளது.

அதற்கமைய, வகுப்பறையில் காணப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15இற்கு குறைவெனில், சகல மாணவர்களையும் தினமும் பாடசாலைகளுக்கு வரவழைக்க முடியும் என்பதுடன், 16-30 வரையான மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பார்களாயின் இரண்டு பிரிவுகளாக அவர்களைப் பிரிக்கவும் 30மோணவர்கள் இருப்பார்களாயின் 3 பிரிவுகளாக பிரித்து மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைக்க முடியுமென, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்n.