தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

கட்சி பிரதிநிதிகளுடன் இன்றுகாலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.