முல்லைத்தீவு மாவட்டம், முத்தையன்கட்டு, 01ம் கண்டம் பகுதியைச் சேர்ந்த அப்பையா ரகுநாதன் என்பவர் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில், அவரது மனைவி இராசாத்தியின் பொறுப்பில்
தனது பிள்ளைகளுடன் வாழ்வாதார வசதிகள் ஏதுமின்றி மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்தார் .

இந்நிலையில், தமக்கு உதவுமாறு இரகுநாதன் அவர்களின் குடும்பம் புளொட் அமைப்பின் முல்லை மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கமைய, புளொட் அமைப்பின் சுவிஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியில், அக் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியாக 45,000 ரூபாய் பெறுமதியிலான 07 ஆடுகள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டதுடன் ஆட்டுக்கொட்டகை திறுத்துவதற்கு 3600  ருபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று  (23.04.2021) மாலை  இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் பொருளாளர் தோழர் க.சிவநேசன்( பவன்), தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் யூட் ஆகியோர் கலந்து கொண்டு உதவியை வழங்கியிருந்தனர்.

.